சென்னை: தமிழகத்தில் இன்று 1,916 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 34 பேர் உயிரிழந்துள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்து உள்ளது.

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, மாநிலம் முழுவதும்  கடந்த 24 மணிநேரத்தில் 1,916 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளனர்.  மாநில தலைநகர் சென்னையில் இன்று மட்டும் 219 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். இதன்மூலம்  கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,86,885 பேர் ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 34 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 34,496 ஆக அதிகரித்துள்ளது.

அதே வேளையில், 1,866 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையில் 25,31,962 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போதைய நிலையில், கொரோனா வார்டில் 20,427 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்/

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,60,306 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 3,96,45,946 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.