சென்னை: திமுக எம்.பி. கனிமொழ, விஜயகாந்த், நாஞ்சில் சம்பத் உள்பட அரசியல்  அரசியல் பிரமுகர்கள் மீது தொடரப்பட்ட 130  அவதூறு வழக்குகளையும் ரத்து செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


அரசியல் கட்சி பிரமுகர்கள் மீது தொடரப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளையும் திரும்பப்பெறவும்,அதன் மீதான அனைத்து மேல் நடவடிக்கைகளையும் கைவிடவும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு  வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 2012-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவதூறு பேச்சுகளுக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், காங்கிரஸ் கட்சியில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், விஜயதாரணி, மார்கசிஸ்ட் கம்னியூஸ்ட் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், அரசியல் பிரமுகர்கள் பழ.கருப்பையா, நாஞ்சில் சம்பத், கே.என். நேரு, கனிமொழி, தயாநிதி மாறன், ஆர்.எஸ்.பாரதி, எஸ்.ஆர.பார்த்திபன் மற்றும் திமுக தலைமை கழக பேச்சாளர்கள் ஆகியோர் மீது சுமார் 130 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்தன.

அரசியல் கட்சி பிரமுகர்கள் மீது தொடரப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளையும் திரும்ப பெறவும், அதன் மீதான அனைத்து மேல் நடவடிக்கைகளையும் கைவிடவும் முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.