டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 8,084 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதுடன், 10 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர்.  நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டி உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்றுகாலை 8 மணி வரையிலான கடந்த 24மணி நேர கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டு உள்ளது. அதன்படி, நேற்று ஒரே நாளில், புதிதாக  மேலும் 8,084 பேர் பாதித்துள்ளனர்.  இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,32,30,101 ஆக உயர்ந்தது.

நேற்று மேலும் 10 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.  இதன் மூலம், மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,771 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளது.

கடந்த 24மணி நேரத்தில்  தொற்று பாதிப்பில் இருந்து  4,592 பேர் குணமடைந்துள்ளனர்.  இதன் மூலம், குணமடைந்தோர் எண்ணிக்கை 4,26,57,335ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.68% ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் 47,995 வேபர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.11% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 1,95,19,81,150 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 11,77,146 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]