திருவனந்தபுரம்: உக்ரைனில் இருந்து வெளியேறிய இந்திய மாணவர்கள் ரஷிய பல்கலைக்கழகங்களில் படிக்கலாம் என கேரளாவில் இந்திய ரஷியதூதர் தெரிவித்து உள்ளார்.

உக்ரைன் ரஷியா போர் காரணமாக, அங்கு மருத்துவம் உள்பட உயர்படிப்பு படிக்கச்சென்ற ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தாயகம் திரும்பினர். அவர்களது எதிர்பால படிப்பு கேள்விக்குறியாகி வருகிறது. இதுதொடர்பாக, உக்ரைனின் அண்டை நாடுகளுடன் பேசி வருவதாக இந்திய வெளியுறவுத்துறை கூறியுள்ளது. இந்த நிலையில், உக்ரைனில் இருந்து வெளியேறிய மாணவர்கள் முந்தைய கல்வி ஆண்டுகளை இழக்காமல், படிப்பை தொடரலாம் என ர ரஷிய தூதரர் தெரிவித்து உள்ளார். 

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த, டெல்லி ரஷிய தூதரக துணைத் தலைவர் ரோமன் பாபுஷ்கின், உக்ரைனில் போர் காரணமாக, தங்களது  படிப்பை பாதியில் விட்டு வெளியேறிய இந்திய மாணவர்கள் முந்தைய கல்வி ஆண்டுகளை இழக்காமல், ரஷிய பல்கலைக் கழகங்களில் சேர்ந்து படிக்க ஆவன செய்யப்படும்.  இதன் மூலம் அவர்கள், கல்வியை விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடரலாம் என தெரிவித்தார்.

இதுதொடர்பாக பேசிய ரஷிய கூட்டமைப்பின் கெளரவ தூதரும், திருவனந்தபுரத்தில் உள்ள ரஷிய மாளிகை இயக்குநருமானர தீஷ் சி நாயர,  மாணவர்கள் உக்ரைன் பல்கலைக்கழங்களில் கல்வி உதவித்தொகை பெற்றிருந்தால், ரஷிய பல்கலைக்கழகங்களிலும் இது ஏற்றுக்கொள்ளப்பட லாம் என குறிப்பிட்டார். இருப்பினும், உக்ரைனில் செலுத்தப்பட்ட கட்டணம் ரஷியாவில் போதுமானதாக இருக்காது என்பதையும் சுட்டிக்காட்டிதுடன்,  உக்ரைனில் இருந்து திரும்பிய கேரளா மாணவர்கள் தங்கள் மதிப்பெண்கள் மற்றும் பிற கல்வி சான்றிதழ்களுடன் இங்குள்ள ரஷ்ய மாளிகையைத் தொடர்பு கொள்ளலாம் என்றும், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோருடன் தொடர்பு கொள்ளும் ரஷிய பல்கலைக்கழகங்களுக்கு இந்த விபரங்கள் அனுப்பப்படும் என்று அவர் கூறினார்.