Skip to content

today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்

தமிழ் செய்தி இணையதளம்

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
  • Youtube
TN ASSEMBLY ELECTION 2021 தமிழ் நாடு

சென்னையில் இதுவரை 1,221 பேர் தபால் ஓட்டு; ரூ.20கோடி பறிமுதல்! பிரகாஷ் தகவல்

Mar 29, 2021

சென்னை: சென்னையில் கடந்த 3நாளில் 1,221 பேர் தபால் ஓட்டு போட்டுள்ளனர் என்றும், ரூ.20கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ள என  சென்னை தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையருமான பிரகாஷ்  தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6ந்தேதி  சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முன்னதாக தபால் வாக்குப்பதிவு மார்ச் 26ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அதிகாரி ஜி.பிரகாஷ் தலைமையில் சென்னை அம்மா மாளிகையில் நேற்று நடந்தது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர்,  சென்னையில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் அடிப்படை பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தலைப் பொறுத்தவரை ஒரு தொகுதியில் 16 வேட்பாளர்களுக்கு மேல் இருந்தால் கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும்.   கூடுதல் வேட்பாளர்கள் உள்ளதால், 7 ஆயிரத்து 181 துணை வாக்குப்பதிவு எந்திரங்களும், 537 விவிபேட் எந்திரங்களும் குலுக்கல் முறையில் தொகுதிக்கு ஒதுக்கும் முறை நடந்து முடிந்தது. இவை 31-ந்தேதிக்குள் அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளுக்குப் பிரித்து அனுப்பப்படும்.
சென்னையில் (28ந்தேதி வரை) 1182 முதியோர்கள், 39 மாற்றுத்திறனாளிகள் என 1221 பேர் தபால் ஓட்டு அளித்துள்ளனர். தேர்தல் பறக்கும் படை மூலம் ஏறக்குறைய ரூ.20 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னையில்  கண்காணிப்பு மற்றும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் தேர்தல் தொடர்பாக இதுவரை 316 புகார்கள் வந்துள்ளன. 312 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 4 புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டம், பிரசாரம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு 3 ஆயிரத்து 258 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதில் 2 ஆயிரத்து 89 விண்ணப்பங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. 648 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 413 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. 108 விண்ணப்பங்கள் அனுமதி பெற்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 36 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், அந்த தொகுதியில் மட்டும் அதிக வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படுகின்றன. அந்தவகையில் அங்கு 3 எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தியாகராயநகரில் குறைவான வேட்பாளர்கள் உள்ளதால், அங்கு ஒரு வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்படுகிறது.
துறைமுகம் தொகுதியில் ரூ.7 கோடியே 77 லட்சம் வரையிலும், அண்ணாநகர் தொகுதியில் ரூ.5 கோடியே 31 லட்சம் வரையிலும், வேளச்சேரியில் ரூ.5 கோடியே 50 லட்சம் வரையிலும் பணம், பொருட்கள் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில் உள்ள  16 தொகுதிகளில் இந்த தபால் வாக்கு பதிவு செய்யப்பட உள்ள நிலையில், 15 தபால் ஓட்டுக்களுக்கு ஒரு குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. இந்த தபால் வாக்கு மார்ச் 31 ஆம் தேதி வரை பதிவு செய்யப்படுகிறது. தபால் வாக்கு பதிவு செய்ய 7,300 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel
YouTube Video VVVXVTV4RTg2Vm5pVjhlWjZtS2NlLVR3LjNtZVVBLTU4bktJ சாய்பாபா  பணிப்பெண் மூலமாக தெரிவித்தது என்ன?

#saibaba #saibabablessings #patrikaidotcom #saibabamiracles #jaisaibaba #divotional #omsairam #omsai #omsaibaba #saiaashirwad #shiradi #shridisaibaba
சாய்பாபா  பணிப்பெண் மூலமாக தெரிவித்தது என்ன?

#saibaba #saibabablessings #patrikaidotcom #saibabamiracles #jaisaibaba #divotional #omsairam #omsai #omsaibaba #saiaashirwad #shiradi #shridisaibaba
சாய்பாபா பணிப்பெண் மூலமாக தெரிவித்தது என்ன? #saibaba #omsairam
எடப்பாடி கூட்டத்தை சேர்க்கிறாரு..  OPS,KAS க்கு தானா வருதா?  நெசவாளன் அரசன்

#sengottaiyan #admk #edapadipalaniswamy #tnelection2026 #tamilnadupolitics #patrikaidotcom #dmk #vijay #tamilnadupoliticalnews #kasengottaiyan #kas #ops #eps #tvk #tvkvijay #bjp  #admkalliance #ssarasan #gobichettipalayam #dindukal
எடப்பாடி கூட்டத்தை சேர்க்கிறாரு.. OPS,KAS க்கு தானா வருதா?  நெசவாளன் அரசன் #sengottaiyan
கதிர்காமம் கந்தப்பெருமானே.. உமா பாலசுப்பிரமணியம் 

#thiruppugazh  #aarupadai​ #murugantemple​ #murugan​ #srilankatemples ​  #temples​ #sivaperuman​ #ilakkiyam​ #tamilgod​ #bhakti​ #sivalayam​ #bhaktisongs​ #palani​ #senthilnathan​ #tiruchendur​ #vetrivel​ #kavadi​ #omsaravanabhava​  #tamilnadu​ #pazhamudhircholai​ #thirupugal​ #tiruchendurmurugan​ #patrikaidotcom #aarupadaiveedu #vaitheeswarankovil #thirupparankundram #pazhamudhircholai #kadamba #walajabad #oothukadu
கதிர்காமம் கந்தப்பெருமானே.. உமா பாலசுப்பிரமணியம் #thiruppugazh
Load More... Subscribe

Post navigation

ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு போன்றவற்றால் தமிழகத்தில் பல லட்சம் பேர் வேலை இழந்தனர்! ராகுல் காந்தி
செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி கம்பிகளின் விலை உயர்வு: 9முன்னணி நிறுவனங்கள் மீது சிபிஐ விசாரணை?

Related Post

தமிழ் நாடு

கோவளத்தில் நீர்த்தேக்கம் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி!!

தமிழ் நாடு

அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்று சேர்வதற்காகவே அமித்ஷாவைச் சந்தித்தேன்! ஓபிஎஸ்…

தமிழ் நாடு

அதிமுகவில் அடுத்த விக்கெட்? அமைச்சர் முத்துசாமியுடன் முன்னாள் அதிமுக அமைச்சர் திடீர் சந்திப்பு….

உலகம்

இந்தியா உலகம்

இரண்டுநாள் அரசுமுறைப் பயணமாக இன்று மாலை இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்!

December 4, 2025 A.T.S Pandian
உலகம்

19 நாடுகளைச் சேர்ந்தவர்களின் விசா விண்ணப்பங்கள் தற்காலிக நிறுத்தம்… அமெரிக்கா அறிவிப்பு

December 3, 2025 Sundar
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உலகம்

புவி காந்த புயல் : இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட சக்திவாய்ந்த சூரிய வெடிப்பு காரணமாக நாசா எச்சரிக்கை

December 3, 2025 Sundar
உலகம்

2 வாரத்தில் 1000 பேர் வரை பலி… தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மழையின் கோரத்தாண்டவம்…

December 1, 2025 Sundar
உலகம்

சிறுவர்களின் ஆபாச வீடியோ தொடர்பாக சிட்னியைச் சேர்ந்த 4 பேரை ஆஸ்திரேலிய போலீசார் கைது செய்துள்ளனர்.

December 1, 2025 Sundar

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer