மெஹ்னார்:
பிகார் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிகாரில் சாலையோரம் சென்றவர்கள் மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் ஏழு சிறுவர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குடியரசு தலைவர், பிரதமர், பிகார் முதல்வர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.