டெல்லி:  இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 13,615 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதே வேளையில் சிகிச்சை பலனின்றி 20 பேர் பலியாகி உள்ளனர். நேற்று புதிதாக 16,678 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், இன்று பாதிப்பு 13,615 ஆக குறைந்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலான கொரோனா நிலவரம் குறித்து வெளியிட்ட அறிக்கையில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 13,615  பேர் பாதித்துள்ளனர்.  இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,36,52,944ஆக உயர்ந்தது. தினசரி பாதிப்பு விகிதம் 3.23% ஆக உள்ளது.

நேற்று மேலும் 20 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். இதன் மூலம், உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,25,474-ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.20% ஆக குறைந்துள்ளது.

கடந்த 24மணி நேரத்தில் மேலும் 13,265 -பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,29,96,427 -ஆக உயர்ந்துள்ளது.  குணமடைந்தோர் விகிதம் 98.50% ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் 1,31,043 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.  சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.30% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 10,64,038 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1,99,00,59,536 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.