தருமபுரி:

ருமபுரி பகுதிகளில் உள்ள  உள்ள பள்ளி, கல்லூரி முன்பு மாணவிகளை கேலி, கிண்டல் செய்து வந்த 11 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.

பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகளை சிலர் கிண்டல் செய்து வருவதாக புகார்கள் வந்த நிலையில், அதுகுறித்து, தருமபுரி டவுன் போலீசார்  தனிப்படை அமைத்த திடீர்  ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, தருமபுரியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரி முன்பும், அவ்வையார் மகளிர் மேல் நிலைப்பள்ளி முன்பும், பஸ்சுக்காக காத்திருக்கும் மாணவிகளிடம்  சில வாலிபர்கள் வலிய வந்து பேச்சு கொடுத்துவந்ததும், அவர்கள் மறுத்த நிலையில் மீண்டும் மீண்டும் வந்து தொல்லை கொடுத்து வந்தனர். அவர்களை சுற்றி வளைத்து மடக்கிய காவல்துறையினர், அவர்களை கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். சுமார் 11 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.