சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 1,639 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு உள்ளதுடன், 27 பேர் உயிரிழந்து உள்ளனர்.

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் மேலும் 1,639 பேருக்கு தொற்று உறுதி செய்ப்பட்டுஉள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 26,32,231 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது மாநிலம் முழுவதும் 16,399 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தல் மேலும் 1,517 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளனர். இதன்மூலம் இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 25,80,686 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் தொற்று பாதிப்பு காரணமாக 27 பேர்உயிரிழந்து உள்ளனர். இதன் காரணமாக உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை  35,146  ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் இதுவரை 4,40,65,393 பேருக்கு சோதனை நடத்தப்பட்டு உள்ளது. இன்று மட்டும் 1,58,623 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது.

மாநிலத்தில் அதிகபட்ச கொரோனா பாதிப்பு கோவையில் உள்ளது. அங்கு 224 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து சென்னையில் 170 பேரும்,  ஈரோட்டில் 151 பேரும், செங்கல்பட்டில் 120 பேரும், தஞ்சாவூரில் 117 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.