சென்னை: தமிழ்கத்தில்  கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் இன்று 1,639 பேருக்கு தொற்று உறுதி செய்ப்பட்டு உள்ளது. இதில் சென்னையில் 170 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனனர்.  இதனால் மொத்த பாதிப்பு 26,32,231 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில்,  இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 25,80,686 ஆக உயர்ந்துள்ளது.அதே வேலையில் தொற்று பாதிப்பு காரணமாக  உயிரிழந்தோர்  மொத்த எண்ணிக்கை  35,146  ஆக அதிகரித்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 16,399 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநிலத்தில் அதிகபட்ச கொரோனா பாதிப்பு கோவையில் உள்ளது. அங்கு 224 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து சென்னையில் 170 பேரும்,  ஈரோட்டில் 151 பேரும், செங்கல்பட்டில் 120 பேரும், தஞ்சாவூரில் 117 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னையில் இன்று புதிதாக மேலும் 170 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 54,60,52 ஆக அதிகரித்து உள்ளது. இன்று ஒருவர் மட்டுமே  உயிரிழந்துள்ளதுடன், இதுவரை 8433 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மேலும் 203 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 53,58,66 ஆக அதிகரித்துள்ளது. தற்போது சென்னையில்,1764 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு:

அரியலூர் 13
செங்கல்பட்டு 120
சென்னை 170
கோயம்புத்தூர் 224
கடலூர் 30
தர்மபுரி 16
திண்டுக்கல் 22
ஈரோடு 151
கல்லக்குறிச்சி 33
காஞ்சிபுரம் 30
கன்னியாகுமரி 31
கரூர் 17
கிருஷ்ணகிரி 21
மதுரை 20
மயிலாடுதுறை 24
நாகப்பட்டினம் 26
நாமக்கல் 52
நீலகிரி 32
பெரம்பலூர் 5
புதுக்கோட்டை 18
ராமநாதபுரம் 6
ராணிப்பேட்டை 19
சேலம் 55
சிவகங்கை 29
தென்காசி 8
தஞ்சாவூர் 117
தேனி 7
திருப்பத்தூர் 6
திருவள்ளூர் 58
திருவண்ணாமலை 35
திருவாரூர் 39
தூத்துக்குடி 10
திருநெல்வேலி 9
திருப்பூர் 91
திருச்சி 47
வேலூர் 22
விழுப்புரம் 19
விருதுநகர் 7