டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,68,063 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதே வேளையில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,461 ஆக உயர்வு.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவின் கொரோனா மற்றும் ஒமிக்ரான் நிலவரம் குறித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி நாடு முழுவதுரும் புதிதாக மேலும் 1,68,063 பேர்  கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 10,000 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,58,75,790 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4,84,213 பேர் உயிரிழந்துள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 3,45,70,131 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 7,23,619 ஆக இருந்த நிலையில்,தற்போது 8,21,446 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் ஒமிக்ரான் பாதிப்பும் நாளுக்கு நாள்உயர்ந்து வருகிறது. நாடு முழுவதும்  ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த  எண்ணிக்கை 4,461 ஆக உயர்ந்துள்ளது.அதில் 1,711 பேர் குணமடைந்துள்ளனர்.

அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் – 1,247, டெல்லியில் – 546, கேரளாவில் – 350, தமிழகத்தில் – 185 ஆக பதிவாகியுள்ளது.