சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை 10ம் வகுப்பு பொதுதேர்வு தொடங்க உள்ள நிலையில், தேர்வு எழுதும் மாணாக்கர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் மார்ச் 26ந்தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி ஏப்ரல் 8ந்தேதி முடிவடைகிறது.  நாளை முதல் நாளில்  முதல்தேர்வாக தமிழ் உள்ளிட்ட மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது.  தொடர்ந்து மற்ற பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் இருந்து  12,616 பள்ளிகளில் இருந்து 9.10 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். மேலும்,  28,827 தனி தேர்வர்கள், 235 சிறை கைதிகள் உட்பட மொத்தம் 9.38 லட்சம் பேர் 10ம் வகுப்பு தேர்வை எழுத தயாராக உள்ளனர். இந்த தேர்வுக்காக , மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 48,700 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். . பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 48,700 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இந்த நிலையில்,  பொதுத்தேர்வு எழுதும் பத்தாம்  வகுப்பு  மாணாக்கர்களுக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைளமான  எக்ஸ் தள பக்கத்தில்இ பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே… All the best! நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதனை மற்றுமொரு தேர்வாகக் கருதி நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெறுங்கள். பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகள் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்குச் சென்றிடுவதை உறுதிசெய்யுங்கள் என பதிவிட்டுள்ளார்.