சென்னை: மறைந்த தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்த நாள் வரும் 17-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தலைமைக்கழகத்தில் உள்ள எம்ஜிஆரின் உருவ சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை செய்கிறார்.

எம்ஜிஆரின் 109ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி வரும் 17ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அன்று காலை 10.30 மணிக்கு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் எம்ஜிஆர் சிலைக்கு, கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி, மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்குகிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்த நாளான வருகிற 17-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள, எம்.ஜி.ஆர். உருவச் சிலைக்கு, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், எடப்பாடி பழனிசாமி, மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி, கழகக் கொடியினை ஏற்றி வைத்து இனிப்பு வழங்க உள்ளார்.
அதனைத் தொடர்ந்து, தலைமைக் கழகச் செயலாளர்கள் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், வருகிற 17-ஆம் தேதி அன்று எம்.ஜி.ஆர். உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்தும், ஆங்காங்கே எம்.ஜி.ஆர். படங்களை வைத்து மாலை அணிவித்தும், மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]