ஐதராபாத்: ஆந்திராவில் இன்று 10,392 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

ஆந்திராவில் சில நாட்களாக கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அம்மாநிலத்தில் இன்று மட்டும் 8,454 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனால் மாநிலத்தின் ஒட்டு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,48,330 ஆக உயர்ந்துள்ளது. 72 பேர் உயிரிழக்க பலி எண்ணிக்கை 4,125 ஆக உள்ளது. 8,454 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

இதன் மூலம் மாநிலத்தில் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2,86,720 ஆக அதிகரித்துள்ளது. 1,03,076 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.