டில்லி

டனடியாக மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என 10 எதிர்க்கட்சிகள் கடிதம் அனுப்பி உள்ளன

கடந்த மாதம் 3 ஆம் தேதி மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையே மூண்ட கலவரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை.  மணிப்பூர் மாநிலம் முழுவதும் அவ்வப்போது நடந்து வரும் மோதல்களில் உயிரிழப்புகள் தொடர்கின்றன.  இந்த கலவரம் சுமார் 50 நாட்களாக நீடித்து வருகிறது.

இதில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். மேலும்  ஏராளமானோர் காயமடைந்து உள்ளனர். தவிர ஆயிரக்கணக்கானோர் இன்னும் நிவாரண முகாம்களிலேயே நாட்களைக் கழித்து வருகின்றனர்.

மணிப்பூர் கலவரம் தொடர்பாக  காங்கிரஸ் , ஆம் ஆத்மி , திரிணாமுல் காங்கிரஸ் , ஜே.டி.யு உள்ளிட்ட 10 எதிர்க்கட்சிகள் கூட்டாகப் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளது.

அந்த கடிதத்தில், ”உடனடியாக அணைத்து சமுதாய மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்.உடனடியாக மணிப்பூர் ஆயுதம் தாங்கிய குழுவினருடன் இருந்து ஆயுதங்கள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும். பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரத்தில் தலையிட வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.