டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்  மேலும் 11,466 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், சிகிச்சை பலனின்றி 460 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 11,961 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம்  இன்று காலை 9.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை வெளியிட்டு உள்ளது.

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக  மேலும்11,466 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,43,88,579 ஆக உயர்ந்தது.

நேற்று ஒரே நாளில்  460 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,61,849  ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.34% ஆக உள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து நேற்று ஒரே நாளில் 11,961 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம்  குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,37,87,047 ஆக உயர்ந்துள்ளது. கொரோனவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 98.25% ஆக உள்ளது.

தற்போது நாடு முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்ட 1,39,683  பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில்  நேற்று 52,69,137 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதுவரை 1,09,63,59,208 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 12,78,728 சோதனை நடத்தப்பட்டு உள்ளது. இதுவரை  61,85,02,659* சோதனைகள் செய்யப்பட்டு உள்ளது என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.