டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 44,62,965 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் உயிரிழப்பும் 75ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீப நாட்களாக தொற்று பாதிப்பு 90ஆயிரத்தைவிட அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் உச்சபட்சமாக 95,529 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 44லட்சத்து 62ஆயிரத்து 965 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரேநாளில், 73,057 பேர் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதுவரை, நாடு முழுவதும் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 34,69,084 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றுமட்டும் 1168 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை  75,091 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில் 9,18,185  பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.