சென்னை:

சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

அதன்படி, சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24ஆயிரத்து 545ஆக உயர்ந்துள்ளது. தற்போது நோயால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 12,175 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 11,738 பேர், பலியானோர் எண்ணிக்கை 243 ஆக அதிகரித்து உள்ளது.

09.06.2020 அன்று வரை, பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து, கொரோனா நுண்கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 48.6% பேர் (11,738) குணமடைந்து உள்ளனர்; இறப்பு சதவிகிதம் 1% ஆக உள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் ராயபுரம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இங்கு இதுவரை  4,192 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  சென்னையில் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 2,000ஐ தாண்டியுள்ளது.

ராயபுரம் – 4,192

கோடம்பாக்கம் – 2,656
திரு.வி.க நகரில் – 2,351
அண்ணா நகர் – 2,178
தேனாம்பேட்டை – 2,846
தண்டையார் பேட்டை – 3,192
வளசரவாக்கம் – 1,136,
அடையாறு – 1,411,
திருவொற்றியூர் – 934,
மாதவரம் – 682
பெருங்குடி – 450,
சோளிங்கநல்லூர் – 435,
ஆலந்தூர் – 483,
அம்பத்தூர் – 848,
மணலி – 362 பேர், மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட 389 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.