டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 6,093 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. தற்போது 49,626 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலான கடந்த 24மணிநேர கொரோனா பாதிப்புகள் தொடர்பான தகவல்களை வெளியிட்ட உள்ளது.
அதன்படி நேற்று ஒரேநாளில் மேலும் 6,093 பேர் கொரோனா தொற்றால் பாதித்துள்ளனர்.இ தன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,44,84,729 ஆக உள்ளது. தற்போது கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 49,636 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி 31 கொரோனா நோயாளிகள் இறந்துள்ளனர். இதன்மூலம் நாட்டின் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,28,121 ஆக உயர்ந்தது.
தற்போது நாடு முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,39,06,972 -ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.70% ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 2,14,55,91,100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 28,09,189 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]