டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏறி இறங்கி வரும் நிலையில் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24மணி நேரத்தில் 43 பேர் பலியாகி உள்ளனர். இது மருத்துவ நிபுணர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8 மணியுடன் முடிந்த கடந்த  24 மணி நேரத்தில், நாட்டின் கொரோனா பாதிப்பு குறித்து தகவல் வெளியிட்டு உள்ளது. அதன்படி,  புதிதாக 18,840 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,36,04,394 ஆக உயர்ந்தது. தினசரி பாதிப்பு 4.14% ஆக உயர்ந்துள்ளது.

நேற்று சிகிச்சை பலனின்றி மேலும் 43 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம், நாட்டின்  உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,25,386-ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.20% ஆக உள்ளது.

கடந்த 24மணி நேரத்தில் 16,104-பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,29,53,980-ஆக உயர்ந்துள்ளது.  குணமடைந்தோர் விகிதம் 98.51% ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில், நாடு முழுவதும் 1,25,028 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.29% ஆக உள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 12,26,795 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1,98,65,36,288 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.