சென்னை:
மிழகத்தில்,  இன்று மேலும்  4,231 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால் பாதிக்கங்பபட்டோர் எண்ணிக்கை  1,26,581  ஆக அதிகரித்து  உள்ளது. இதுரை  78,161 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,765 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  சென்னையில் இன்று ஒரே நாளில் 1,216 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி யுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  73,728  ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1169-ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு:

ன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 4,231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,26,581 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,994 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் இதுவரை 78,161 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 41,038 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 14,28,360 ஆக இருக்கின்றது.

தமிழகத்தின் 37 மாவட்டங்களிலும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
சென்னை -1216
திருவள்ளூர் – 364
விருதுநகர் – 289
மதுரை – 262
க.குறிச்சி – 254
தூத்துக்குடி – 196
செங்கல்பட்டு – 169
நெல்லை – 110
கோவை – 98
குமரி – 93
திருச்சி – 93
சேலம் – 92
தேனி – 90
வேலூர் – 87
ராணிப்பேட்டை – 79
தி.மலை – 70
காஞ்சிபுரம் -67
கடலூர் – 67
சிவகங்கை – 62
ராமநாதபுரம் – 61
தர்மபுரி – 56
புதுக்கோட்டை – 46
திருவாரூர் – 40
விழுப்புரம் – 31
தஞ்சை – 32
தென்காசி – 29
நாகை – 25
திருப்பத்தூர் – 19
ஈரோடு – 17
நாமக்கல் – 17
நீலகிரி – 13
திருப்பூர் – 6
அரியலூர் – 5
பெரம்பலூர் -5
திண்டுக்கல் – 4
கரூர் – 4
கிருஷ்ணகிரி – 4

இன்று தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.