டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 1109 பேருக்கு கொரோனா 43 பேர் பல 1,213 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை  வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் மேலும் 1109 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,33,067 ஆக உயர்ந்தது.

நேற்று மேலும் 43 பேர் கொரோனா தொற்று காரணமாக இறந்துள்ளனர். இதன்மூலம்  நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,21,573 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தொற்றில் இருந்து 1,213 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம்  குணமடைந்தோர் மொத்த  எண்ணிக்கை 4,25,00,002 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.76% ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் 11,492 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.03% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில்  இதுவரை 185,38,88,663 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 16,80,118 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.