டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 10,929 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதுடன் 393 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் கணிசமாக குறைந்து வருகிறது. அதுபோல உயிரிழப்பும் வெகுவாக குறைந்துள்ளது. அதேவேளையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமடைந்துள்ளத. இதுவரை 107 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு நிலவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி நேற்று புதிதாக 10,929 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,43,44,683 ஆக உயர்ந்தது.
நேற்று ஒரே நாளில் 392 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4,60,265 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழப்போர் விகிதம் 1.34%ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 12,509 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 3,37,37,468 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைவோர் விகிதம் 98.23%ஆக உள்ளது.
தற்போது நாடு முழுவதும் 1,46,950 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் நேற்று 20,75,942 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதுவரை 1,07,92,19,546 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
இவ்வாறு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.