சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 862 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 1009 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் சிகிச்சை பலனின்றி  10 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறை இன்று இரவு 8 மணி அளவில் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24மணி நேரத்தில்  மேலும் 862 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 27,08,230 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மேலும் 10 பேர் சிகிச்சை பலனின்றி கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 36,214ஆக உயர்ந்துள்ளது.  இவர்களில் 7 பேர் தனியார் மருத்துவமனையிலும், அரசு மருத்துவமனையில் 03 பேரும் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24மணி நேரத்தில் மேலும் 1,009 பேர் குணமடைந்துள்ள நிலையில்,  இதன் மூலம் மொத்தம் 26,61,428 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதிக பட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 122 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 5,55,305 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 10,588 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.