சென்னை: தமிழ்நாட்டில் இன்று 862 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், சென்னையில் 122 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, மாநிலம் முழுவதும் இதுவரை  27,08,230 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதுவரை 26,61,428 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே வேளையில் சிகிச்சை பலனின்றி கொரோனாவுக்கு 36,214 பேர்  உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 10,588 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

அதிக பட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 122 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 5,55,305 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒருவர் மட்டுமே உயிரிழந்த நிலையில் இதுவரை 8562 பேர் பலியாகி உள்ளனர்.

கடந்த 24மணி நேரத்தில் மேலும் 137 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 5,45,492 ஆக அதிகரித்துள்ளது. தற்போது சென்னையில் 1251 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு:

அரியலூர் 1
செங்கல்பட்டு 79
சென்னை 122
கோவை 99
கடலூர் 13
தர்மபுரி 18
திண்டுக்கல் 6
ஈரோடு 67
கள்ளக்குறிச்சி 5
காஞ்சிபுரம் 26
கன்னியாகுமரி 17
கரூர் 21
கிருஷ்ணகிரி 9
மதுரை 13
மயிலாடுதுறை 3
நாகப்பட்டினம் 7
நாமக்கல் 39
நீலகிரி 16
பெரம்பலூர் 2
புதுக்கோட்டை 7
ராமநாதபுரம் 0
ராணிப்பேட்டை 3
சேலம் 54
சிவகங்கை 7
தென்காசி 2
தஞ்சாவூர் 30
தேனி 2
திருப்பத்தூர் 3
திருவள்ளூர் 34
திருவண்ணாமலை 8
திருவாரூர் 16
தூத்துக்குடி 7
திருநெல்வேலி 8
திருப்பூர் 60
திருச்சி 30
வேலூர் 13
விழுப்புரம் 9
விருதுநகர் 6