டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5ஆயிரத்துக்கும் கீழே குறைந்துள்ளது.  தற்போது நாடு முழுவதும் 52,336 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினசரி பாதிப்பு விகிதம் 1.20 சதவிகிதமாக உள்ளது.  இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலான  கடந்த 24 மணி நேரத்தில் பதிவான கொரோனா தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி,  நேற்று புதிதாக மேலும் 4,417 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 6 ஆயிரத்து 809 பேரும், நேற்று 5 ஆயிரத்து 910 பேரும் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், நேற்று பாதிப்பு வெகுவாக குறைந்து 5ஆயிரத்துக்கும் கீழே சென்றுள்ளனர்.  மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,44,66,862 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24மணி நேரத்தில் தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி  23 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,28,030 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் மேலும்  6,032 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,38,86,496 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு  52,336 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் இதுவரை 2,13,72,68,615 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 19,93,670 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது .

அதுபோல  கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 3,67,490 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 88,77,46,764 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.