சென்னை: தமிழகத்தில் இன்று எந்தவித கொரோனா உயிரிழப்பின்றி,  30 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன், 28 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 258 பேர் சிகிக்சையில் உள்ளனர்.

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு 7மணி அளவில் வெளியிட்டுள்ள தகவலின்படி,  மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை. கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் எந்தவொரு கொரோனா உயிரிழப்பும் இல்லாதது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 34,52,985 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 28 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,14,702ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் யாரும் கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை. இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,025 ஆக தொடர்கிறது.

தற்போது மாநிலம் முழுவதும் 258 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக  சிகிச்சை பெற்று வருகின்றனர்.