டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 19,893 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 53 பேர் பலியாகி உள்ளனர். கடந்த சில நாட்களாக பாதிப்பு 15ஆயிரமாக குறைந்த நிலையில், இன்று மேலும் அதிகரித்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம்  இன்று காலை 8 மணியுடன்  கூடிய கடந்த 24மணிநேர கொரோனா பாதிப்பு குறித்த  வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று ஒரே நாளில் மேலும்  19,893 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,40,87,037 ஆக உயர்ந்தது.

கடந்த 24மணி நேரத்தில், சிகிச்சை பலனின்றி  53 பேர் இறந்துள்ளனர். இதன் காரணமாக, நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,26,530 ஆக உயர்ந்தது.

நேற்று ஒரே நாளில் 20,419 பேர் குணமடைந்துள்ளனர்.  இதனால் குணமடைந்தோர் மொத்த  எண்ணிக்கை 4,34,24,029 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும்,  1,36,478 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தியாவில் இதுவரை 2,05,22,51,408 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 38,20,676 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.