டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 16,135 பேர் கொரோனாதொற்றால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், 24 பேர் பலியாகி உள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை மணி வரையிலான கடந்த 24மணி நேர கொரோனா பாதிப்பு குறித்து தகவல்  வெளியிட்டுள்ளது. அதன்படி,  புதிதாக மேலும், 16,135 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,35,18,564 ஆக உயர்ந்தது.

நேற்று 24 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், மொத்த  உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,25,223 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் 1,13,864 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.26% ஆக குறைந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் தொற்றில் இருந்து  13,958 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,28,79,477 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.54% ஆக உயர்ந்துள்ளது. உ

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,78,383 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை  1,97,98,21,197 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.