சென்னை: தமிழகத்தில் மேலும் 4,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 4,724 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ்  செய்யப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக இன்று கோவையில் 474 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் இன்று ஒரே நாளில் 227 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில், இதுவரை  24,92,420 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  24,23,606 பேர் குணமடைந்துள்ளனர். சிகிச்சை பலனின்றி 32,933 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய நிலையில் மாநிலம் முழுவதும்  35,881 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை 3,33,22,908 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு:

சென்னையில் இன்று ஒரே நாளில் 227 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 5,33,224 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 20 பேர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 8217 ஆக அதிகரித்துள்ளது. அதே வேளையில் இன்று 478 பேர் தொற்றின் பிடியில் இருந்து குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 52,25,61 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில், 2446 பேர்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு:

அரியலூர் 51
செங்கல்பட்டு 188
சென்னை 227
கோவையில் 474
கடலூர் 98
தர்மபுரி 92
திண்டுக்கல் 31
ஈரோட் 360
கள்ளக்குறிச்சி 91
காஞ்சிபுரம் 62
கன்னியாகுமரி 69
கரூர் 44
கிருஷ்ணகிரி 89
மதுரை 78
மயிலாடுதுரை 37
நாகப்பட்டினம் 42
நாமக்கல் 118
நீலகிரி 77
பெரம்பலூர் 24
புதுக்கோட்டை 66
ராமநாதபுரம் 25
ராணிப்பேட்டை 50
சேலம் 251
சிவகங்கை 57
தென்காசி 29
தஞ்சாவூர் 232
தேனி 49
திருப்பத்தூர் 27
திருவள்ளூர் 102
திருவண்ணாமலை 161
திருவாரூர் 55
தூத்துக்குடி 51
திருநெல்வேலி 32
திருப்பூர் 231
திருச்சி 170
வேலூர் 45
விழுப்புரம் 69
விருதுநகர் 58