சென்னை: தமிழகத்தில் மேலும் 4,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 4,724 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ்  செய்யப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக இன்று கோவையில் 474 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழக சுகாதரத்துறை, மேலும் 4,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 24,92,420 ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில் இன்று  மேலும் 4,724 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 24,23,606 பேர் குணமடைந்துள்ளனர்.

தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி, 115 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 32,933 ஆக உயர்ந்துள்ளது.  இன்று உயிரிழந்தவர்களில்  22 பேர் தனியார் மருத்துவமனையிலும், 93 பேர், அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்.

தற்போதைய நிலையில் மாநிலம் முழுவதும் 35,881 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இதுவரை 3,33,22,908 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,60,194 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அதிக பட்சமாக கோவையில்  474 பேரும், ஈரோடு – 360, சேலம் – 251, திருப்பூர் – 231, தஞ்சாவூர் – 232, சென்னை – 227 பேருக்கும் இன்று தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுஉள்ளது..