டெல்லி: இந்தியாவில்  நேற்று ஒரே நாளில் 13,734 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. சிகிச்சை பலனின்றி  34 பேர் பலியாகி உள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம்  இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, கடந்த 24மணி நேரத்தில் மேலும்  13,734 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,40,50,009 ஆக உயர்ந்தது.

தற்போது நாடு முழுவதும் தொற்று பாதிப்பு காரணமாக  1,39,792 பேர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.32% ஆக குறைந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி மேலும், 34 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் நாட்டின் உயிரிழந்தோர் மொத்த  எண்ணிக்கை 5,26,430 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.20% ஆக உள்ளது.

கடந்த 24மணி நேரத்தில் சிகிச்சை முடிந்து, 17,897 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம்  குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,33,83,787ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.49% ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 2,04,60,81,081 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 26,77,405 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.