சென்னை: தமிழகத்தில் நேற்று 4,481 பேர் புதிதாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 249 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 4,481 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,84,177 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில்  மட்டும் 249 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.

தமிழகத்தில் நேற்று  மட்டும் 102 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32,721 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில்  கொரோனாவிலிருந்து 5,044 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையில்  குணமடைந்தோர் 24,13,930 பேராக உயர்ந்துள்ளது.. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,63,654 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 3,30,01,904 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது கொரோனா வார்டில் 37,526 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் 2,931 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் 249 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதைத்தொடர்ந்து,  இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 5,32,759 ஆக உயர்ந்துள்ளது. நேற்று  4 பேர் மட்டுமே உயிர் இழந்துள்ளார்.. இதுவரை 8,191 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதேவேளையில் நேற்று  416 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,21,637 பேர் குணம் அடைந்துள்ளனர்.

01.07.2021 நிலவரப்படி, சென்னையில் மொத்தம் 25,81,801 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதுடன், 01.07.2021 அன்று 20,236 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மண்டலம் வாரியாக பாதிப்பு விவரம்: