சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சற்று குறையத்தொடங்கி உள்ளது. சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு எப்படி என்பது குறித்து சென்னை மாநகராட்சி மண்டலவாரியாக பட்டியல் வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில்  நேற்று ஒரே நாளில் மட்டும்  27,936 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டனர்.  சென்னையில் 2,596 பேர்  பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில்  இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,96,516 பேர் ஆக அதிகரித்துள்ளது,  தமிழகத்தில்  நேற்று 478 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும்  கொரோனா வார்டில் 3,01,781 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தலைநகர் சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில்  2,689 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,04,502 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று சென்னையில் 91 பேர் உயிர் இழந்துள்ளார்.இதனால் மொத்த உயிரிழப்பி  7,091 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில்  3,990 டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், இதுவரை குணமடைந்தேர் எண்ணிக்கை  4,63,489 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது சென்னையில் 33,922 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மண்டலம் வாரியாக விவரம்: