மும்பை:

டந்த 14ந்தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த 40க்கும் மேற்பட்ட சிஆர்.பி.எப். வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிதி உதவி அளிப்பதாக பிரபல பாலிவுட் பாடகியான லதா மங்கேஷ்கர் அறிவித்து உள்ளார்.

புல்வாமாகதாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு மத்திய மாநில அரசுகள் நிதி உதவி மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கி வரும் நிலையில், திரையுலகை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது பல தரப்பினரும் நிதிஉதவி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில்  பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரும் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 பேர் குடும்பத்துக்கு, தனது  தந்தை இறந்த தினத்தை நினைவு கூறும் வகையில், ரூ.1 கோடி நிதி உதவி வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்.