தூத்துக்குடி

தொடர்ந்து பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை  துண்டாக்கி  விடும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி உள்ளார்.

இன்று தூத்துக்குடியில் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது சீமான் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு,

”நான் பாராளுமன்ற தேர்தலில் தனித்துத் தான் போட்டியிடுகிறேன் என்பதால் வேட்பாளர்களை அறிவித்து வருகிறேன். ஒரு முதல்வர் வெளிநாடு செல்வது தனிப்பட்ட பயணம். ஆகவே அதை யாரும் எதுவும் சொல்ல முடியாது.

தொடர்ந்து பாஜக ஆட்சிக்கு வந்தால், அக்கட்சி இந்தியாவைத் துண்டு, துண்டாக உடைத்து விடும்.  இதைப் போல் இந்தியா கூட்டணியும் தொடர்ந்து நீடிக்காது.

 விரைவில் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து 2026 தேர்தலில் கண்டிப்பாகப் போட்டியிடுவார்.

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனது தந்தையை சங்கி என்று கூறுவதாக, தெரிவித்துள்ளார். ஆனால் சங்கி என்பது இழிவான சொல் இல்லை.

நம் மீது வைக்கக்கூடிய விமர்சனம் உண்மை இல்லை என்றால் நாம் கோபப்படத் தேவையில்லை.

எப்போதுமே  கலைஞர்களைச் சுதந்திரமாக விட வேண்டுமே தவிர உங்கள் விருப்பு, வெறுப்புக்குப் பொருத்திப் பார்க்க வேண்டாம்.

நாம் தமிழர் கட்சி  தமிழகத்தில் நன்கு வளர்ந்துள்ளது.  எனவே தேர்தலில் நிச்சயமாக மாறுதல் இருக்கும்.

என்று பதில் அளித்துள்ளார்