சென்னை:

கருத்து வேறுபாடு காரணமாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் அவரது கணவர் மாதவன் ஆகியோர் பிரிந்திருந்தனர்.

இதனால் மாதவன் புதிய கட்சியையும் தொடங்கி செயல்பட்டார். இந்நிலையில் இன்று இருவரும் ஒன்றாக இணைந்தனர்.

சென்னை தி.நகரில் உள்ள ஜெ.தீபா இல்லத்தில் 300க்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் மாதவன் இணைந்தார். இனிமேல் இருவரும் ஒன்றாக இணைந்து கட்சி பணியாற்ற போவதாக மாதவன் தெரிவித்துள்ளார்.