திருப்பதி

திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் நேற்று முதல் மீண்டும் சுப்ரபாத சேவை தொடங்கி உள்ளது.

திருப்பதியில் திருமலை வெங்கடாசலபதி கோவிலில் தினம் அதிகாலை 3 மணிக்குச் சுப்ரபாத சேவையுடன் நடைதிறக்கப்பட்டு தோமாலை, அர்ச்சனை உள்ளிட்ட சேவைகள் நடைபெறும்.   அதே வேளையில் மார்கழி மாதம் மட்டும் சுப்ரபாத சேவை நடக்காது.  

மாறாக ஆண்டாள் இயற்றிய தமிழ் பாடல்களான திருப்பாவை பாடப்படும்.  அவ்வகையில் கடந்த டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி முதல் ஏழுமலையான் கோவிலில் சுப்ரபாத சேவை பாடப்பட்டது.   தொடர்ந்து 30 நாட்கள் திருப்பாவை பாசுரங்கள் பாடப்பட்டு வந்தன.

தற்போது மார்கழி மாதம் முடிவடைந்து நேற்று முன் தினம் முதல் தை மாதம் பிறந்துள்ளது.   இதையொட்டி ஏழுமலையான் கோவிலில் நேற்று முதல் மீண்டும் சுப்ரபாத சேவை தொடங்கப்பட்டுள்ளது.