பெங்களூரு,

பெங்களூரில் நடைற்று வரும் ஐபிஎல் போட்டிக்கு வீரர்கள் தேர்வுக்கான ஏலம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. முதல் சுற்று ஏலம் முடிவடைந்துள்ள நிலையில், தென்னாப்பிரிக்காவை சேர்ந்த கிறிஸ்கெய்ல் விலை போகாத நிலைக்கு தள்ளப்பட்டார்.

இது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை பெங்களூரு அணிக்காக விளையாடிய கிறிஸ்கெய்ல் முதல் சுற்றில் விலை போகாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தி உளளது.

தமிழகத்தை சேர்ந்த சுழல் பந்துவீச்சாளரான அஸ்வினை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுக்கும் என எதிர்பார்த்த நிலையில் ரூ.7.60 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்து பஞ்சாப் அணி அவரை தட்டிச்சென்றது. அதுபோல ஷிகர் தவானை  ரூ.5.2 கோடிக்கு ஐதராபாத் அணி ஏலம் எடுத்து மீண்டும் தக்க வைத்ததுள்ளது.

மேலும் வெஸ்ட் இன்டிஸ் பிளேயரானா பொலார்டை டெல்லி அணியான டெல்லி டேர் டெவில்ஸ் 5.4 கோடிக்கு எடுத்துள்ளது. இவர் ஏற்கனவே முப்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியவர். இந்த முறை டில்லிக்காக ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் ஏலப்போட்டியில் கலந்துகொள்வதாக உலக நாடுகளை சேர்ந்த 578 கிரிக்கெட் வீரர்கள் தங்கள் பெயர்களை  பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.