டில்லி

த்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் மற்றும் மூத்த பாஜக தலைவர் கல்யான் சிங் உடல்நலக் குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.

கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் 1992 வரையிலும், 1997 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரையிலும் கல்யாண் சிங் உத்தரப் பிரதேச மாநில முதல்வராக பதவி வகித்துள்ளார்.   கல்யாண் சிங் ஆட்சிக் காலத்தில் டிசம்பர் 26, 1992ல்  அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மேலும் கல்யாண் சிங் ராஜஸ்தான் மாநில ஆளுநராகவும் பதவியில்  இருந்துள்ளார்.   அவருக்கு கடந்த ஜூலை மாதம் உடல்நிலைக் குறைபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவர் கடந்த ஜூலை 4ஆம் தேதி முதல் அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.

சிறுநீரகக் கோளாறு, இதயக்கோளாறு, நரம்பியல் பிரச்சினைக்காக அவருக்கு பல்துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.   ஆயினும் அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளார்.. அவர் செப்சிஸ் மற்றும் பல்வேறு உள் உறுப்பு செயலிழப்பால் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சுமார் 89 வயதாகும் கல்யாண் சிங் மறைவுக்கு பாஜக பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.