download
கும்பகோணம்:
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரான ராகுல் காந்தி தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம் என்று தமிழ்நாடு  காங்கிரஸ் கமிட்டியின்  தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறி வருகிறார். இந்த நிலையில், கும்பகோணத்தில் இன்று செய்தியாளர்களிடம் இளங்கோவன் தெரிவித்ததாவது:
“தமிழ்நாட்டில் தில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடவே காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. அப்படி காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் நிலையில் ராகுல்காந்திதான் எங்கள் முதல்வர் வேட்பாளராக இருப்பார். அவர் தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் விரும்புகிறார்கள்” என்றார்.
மேலும், “சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை மேலிடம் விரைவில் முடிவு செய்யும்” என்றும் இளங்கோவன்  தெரிவித்தார்.