jaya-siruthavur
ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் உள்ள கண்டெய்னர் லாரியை தேர்தல் ஆணையமும், காவல்துறையும் சோதனையிட வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,
’’கடந்த சில நாட்களுக்கு முன்பு சில கண்டெய்னர் லாரிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவுக்கு சென்றுள்ளது. அதில் பணம் கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் வருகிறது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கும், காவல்துறை தலைவர் டி.ஜி.பி.க்கும் வைகோ புகார் கொடுத்துள்ளார். ஆனால் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் அந்த கண்டெய்னர் லாரியை தேர்தல் ஆணையமும், காவல்துறையும் சோதனையிட வேண்டும்’’ என்று கோரிக்கை வைக்கிறோம் என்றார்.