யூடியூபர் இர்பான் கார் மோதி பெண் மரணமடைந்ததை அடுத்து தாம்பரம் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உணவகங்களில் விற்கப்படும் உணவு வகைகளை சுவைத்து அதன் சுவை குறித்து பேசி அந்த உணவகங்களுக்கு விளம்பரம் செய்வதன் மூலம் புகழ் பெற்றவர் யூடியூபர் இர்பான்.

சமீப நாட்களாக வி.ஐ.பி.க்களுடன் சேர்ந்து உணவை சுவைத்து தமிழகம் முழுவதும் பிரபலமானார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணமான இவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ராஜ்பவனுக்கு அழைத்து முதல் நபராக இவருக்கு திருமண விருந்து அளித்தார்.

இந்த நிலையில் சென்னையை அடுத்த மறைமலைநகரில் பத்மாவதி என்ற பெண் மீது இவரது கார் மோதியதில் அந்தப் பெண் உயிரிழந்தார்.

இதனையடுத்து இர்பானின் கார் ஓட்டுநர் அசாருதின் மீது இன்று தாம்பரம் போலிசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.