லக்னோ:

உ.பி. மாநிலத்தில் விஷ்வ இந்து பரிஷத் மற்றும் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பை சேர்ந்தவர்கள் காஸ்காஞ்சில் மற்றொரு பிரிவினர் வாழும் பகுதியின் வழியாக தேசியக் கொடியுடன் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினர்.

பேரணி பில்ராம்கேட் பகுதியில் மதுரா -பரேலி சாலையில் சென்ற போது அவர்கள் மீது சிலர் கல் வீசி தாக்கியுள்ளனர். இதனால் அங்கு வன்முறை வெடித்து 12-க்கும் அதிகமான வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

போலீசார் தலையிட்டு கூட்டத்தை கலைத்து வன்முறையை கட்டுக்குள் கொண்டு வந்தனர் இதை தொடர்ந்து 144 தடை உத்தரவை பிறப்பிக்கப்பட்டது. இந்த மோதல் சம்பவத்தில் வாலிபர் ஒருவர் பலியானதாகவும், 3 பேர் படுகாயம் அடைந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.