ஜெய்ப்பூர்: 21 வயது இளைஞர் நாட்டின் இளைய நீதிபதியாக உள்ளார். ஜெய்ப்பூரைச் சேர்ந்த இளைஞர் மாயாங்க் பிரதாப் சிங் ராஜஸ்தானின் இளைய நீதிபதியானதன் மூலம் ஒரு புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளார்.

இந்தியா டுடே டிவியுடன் பேசிய சிங், “ஒரு நல்ல நீதிபதி ஆவதற்கு நேர்மை மிக முக்கியமான அளவுகோல்” என்றார்.

அவர் ஒரு நீதிபதியாக எப்படித் தயாரானார் என்பதைப் பற்றி பேசுகையில், “ஒரு நீதிபதியாக ஆவதற்கு ராஜஸ்தான் நீதித்துறை சேவைகள் 2018 தேர்வில் தேர்ச்சி பெற நான் ஒவ்வொரு நாளும் 12 முதல் 13 மணி நேரம் வரை படிக்க வேண்டியிருந்தது”, என்றார்.

“வெளிப்படையாக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், ஒரு நல்ல முடிவை நான் எதிர்பார்த்தேன். என்னைப் பொறுத்தவரை ஒரு நல்ல நீதிபதி நேர்மையாக இருக்க வேண்டும், மேலும் தசை சக்தி மற்றும் பண சக்தி உள்ளிட்ட வெளிப்புற தாக்கங்களுக்கு ஆளாகக் கூடாது” என்று 21 வயதான மாயங்க் பிரதாப் சிங் கூறினார்.

மாயாங்க் ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டு எல்.எல்.பி படிப்பை மேற்கொண்டார். அவர், ஜெய்ப்பூரில் உள்ள மன்சரோவரில் வசிப்பவர். மாயாங்க் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் தனது எல்.எல்.பி. படிப்பை முடித்தார்.

அவர் தனது 21 வயதில் ராஜஸ்தான் நீதித்துறை சேவை தேர்வில் தேர்ச்சி பெற்றார். இப்போது நாட்டின் இளைய நீதிபதியாக ஆக உள்ளார், மாயாங்க். தனது முதல் முயற்சியிலேயே ஆர்.ஜே.எஸ் தேர்வை முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் உயர்நீதிமன்றம், 2019 ல், ராஜஸ்தான் ஆர்.ஜே.எஸ் தேர்வில் தோன்றும் குறைந்தபட்ச வயதை 21 ஆகக் குறைத்தது. முன்னதாக, தேர்வுக்கான குறைந்தபட்ச வயது 23 ஆக இருந்தது.