பெங்களூரு:

கன்னட நடிகர் சுப்ரமண்யா மீது இளம் பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

ஹோம்பன்னா என்ற கன்னட படத்தில் நடித்தவர் சுப்ரமணியா. இவருக்கும் பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவருக்கும் பேஸ்புக் மூலம் பழகி காதலித்துள்ளனர். இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமண பேச்சுவார்த்தை நடந்த வந்தது.

இந்நிலையில் திருமணத்துக்கு சுப்ரமண்யா மறுப்பு தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் 1ம் தேதி சுப்ரமண்யா அந்த பெண்ணை ஏமாற்றி தனது வாடகை வீட்டிக்கு அழைத்துச் சென்றார். அங்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதன் பின்னரும் திருமணத்துக்கு சுப்ரமண்யா மறுத்ததோடு, வேறு யாரையும் திருமணம் செய்து கொண்டால் ஆசிட் வீசுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இதைதொடர்ந்து சுப்ரமண்யா மீது அந்த பெண், போலீசில் புகார் செய்துள்ளார். இதனால் சுப்ரமணியா தலைமறைவாகி விட்டார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.