சென்னை
நேற்று இரவு சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
அந்த அறிவிப்பில்
“தென்தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடிக்குச் சுழற்சி காரணமாகச் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் பொதுவான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்”
என்று அறிவித்தது.
அதன்படி, சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் இரவு முதல் விடிய விடியப் பரவலாக மழை பெய்தது. மேலும் சென்னை புறநகர்ப் பகுதிகளிலும் மழை பெய்தது. நேற்று இரவு திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் கனமழை பெய்துள்ளது.
Patrikai.com official YouTube Channel