டில்லி

நேற்று தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணையை இந்தியா சோதித்து வெற்றி பெற்றுள்ளது.

நேற்று டி ஆர் டி ஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.  இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒடிசா மாநிலம் பாலசோரில் உள்ள சோதனை மையத்தில்  இருந்து நேற்று காலை 10.30 மணிக்கு ஒரு ஏவுகணை சோதனை முறையில் ஏவப்பட்டது.

இந்த ஏவுகணை மூலம் வானில் உள்ள இலக்கை தரையில் இருந்து தாக்க முடியும்.   இந்த சோதனையில் திட்டமிட்டபடி வானில் இருந்த இலககை ஏவுகணை தாக்கி அழித்துள்ளது.  இந்த ஏவுகணை ஏற்கனவே ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.  அவ்வப்போது இதை மேம்படுத்துவதும் பிறகு சோதிப்பதும் வழக்கமாகும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.