டில்லி

ந்தியாவில் நேற்று 29,413 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,11,73,019 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29,413 அதிகரித்து மொத்தம் 3,11,73,019 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 372 அதிகரித்து மொத்தம் 4,14,513 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 38,521 பேர் குணமாகி  இதுவரை 3,03,46,131 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 3,99,998 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 6,017 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 62,20,207 ஆகி உள்ளது  நேற்று 68 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,27,097 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 13,051 பேர் குணமடைந்து மொத்தம் 59,93,401 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 96,375 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 9,931 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 31,70,868 ஆகி உள்ளது.  இதில் நேற்று 58 பேர் உயிர் இழந்து மொத்தம் 15,408 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 13,206 பேர் குணமடைந்து மொத்தம் 30,33,258 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,21,706 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,291 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 28,85,238 ஆகி உள்ளது  இதில் நேற்று 40 பேர் உயிர் இழந்து மொத்தம் 36,197 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 3,015 பேர் குணமடைந்து மொத்தம் 28,21,491 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 27,527 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,971 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 25,37,373 ஆகி உள்ளது  இதில் நேற்று 28 பேர் உயிர் இழந்து மொத்தம் 33,752 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,558 பேர் குணமடைந்து மொத்தம் 24,76,339 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 27,262 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 1,628 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,41,724 ஆகி உள்ளது.  நேற்று 22 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 13,154 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,744 பேர் குணமடைந்து மொத்தம் 19,05,000 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 23,570 பேர் சிகிச்சையில் உள்ளனர்.