சென்னை

மிழகத்தில் நேற்று 921 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,18,935 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 8,501 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

நேற்று தமிழகத்தில் 66,808 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 1,39,54,043 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

நேற்று 921 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் வெளி மாநிலத்தில் இருந்து ஒருவர் வந்துள்ளார்.   இதுவரை  8,18,935 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று 13 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 12,135 பேர் உயிர் இழந்துள்ளனர்.

நேற்று 1,029 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 7,98,420 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 8,380 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் நேற்று 252 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,25,758 பேர் பாதிக்கப்பட்டு 4,014 பேர் உயிர் இழந்து 2,19,216 பேர் குணம் அடைந்து தற்போது 2,528 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 52,418 பேர் பாதிக்கப்பட்டு 654 பேர் உயிர் இழந்து 50,966 பேர் குணம் அடைந்து தற்போது 798 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 50,090 பேர் பாதிக்கப்பட்டு 744 பேர் உயிர் இழந்து 48,764 பேர் குணம் அடைந்து தற்போது 582 பேர் சிகிச்சையில் உள்ளனர்.